Tuesday, February 19, 2013

Azhugai

அழுகை


பிறந்த நாள் முதலாக
இறக்கும் நாள் வரை;

கண்களில் ஆரம்பித்தது முதல்
கன்னங்களில் வழியும் வரை;

ஜனன ஒலியாக ஆரம்பித்து
மரண ஒலியாக முடியும் வரை;

உணர்ச்சிகள் துளிர்த்த நாள் முதல்
நினைவுகள் மங்கும் நாள் வரை;

பழகத் தெரிந்த நாள் முதல்
பிரிய நேரிட்ட நாள் வரை;

பசிக்கு அழுத நாள் முதல்
பிணியுடன் போரிட்ட நாள் வரை;

தன்மானம் வளர ஆரம்பித்த நாள் முதல்
சுய கெளரவம் தடுக்க ஆரம்பித்த நாள் வரை;

உணர்ச்சிகளின் வடிகாலாக,
துன்பத்தின் வடிகாலாக,
ஆனந்தத்தின் வடிகாலாக,

அவ்வப்போது ஜனிப்பது அழுகை!

2 comments:

  1. Indha azhagiya azhugayai kannutra nodi mudhal , aanandha pravagayil janithadhum adhe yen "Azhugai" dhaan ! LOL

    Mal ! Excellent very proud of u da " ecsp. those lines Thanmaanam to suya gowrawam is very unique ! Keep going !- Chithi

    ReplyDelete